Pages

Tuesday, August 14, 2012

விடியல்

ஆகஸ்ட் 13, இன்றையவிடியல் பஜனைனையுடனேயே விடிந்தது. விடியல் என்பது அதிகாலை மணி 5 எல்லாம் இல்லை. குத்துமதிப்பா மத்தியானம் 2 மணி இருக்கும். என்போன்ற நைற் சிப்ற் போறவர்களுக்கு அதுதான் விடியும் நேரம். அதற்குப் பின்னர் கூட இருக்கலாம். பஜனையும் சற்று வித்தியாசமானது தான். எனது ரூம் மேற் தனது மனைவியை நோக்கித்தான் இம்மை வறுமை இல்லாமல் பஜனை பண்ணிகிட்டிருந்தார். ஒரே ரூம்லயே இன்னோருத்தன் முன்னாடி அப்படி எல்லாம் இல்லை, ஸ்கைப்ல தான் இந்தக்கூத்து. என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொண்ட விடயம் என்னவென்றால் அவர் சகோதர மொழிக்காரர். ஆனாலும் நாம் தான் பிறமொழியானாலும் கெட்டவார்த்தைகளில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று விடுவதால் அவரது பஜனை எனக்கும் விளங்கியது. நாய், பேயில் தொடங்கி தமிழில் ரான்சிலேற் பண்ண முடியாதளவுக்கு எல்லா கெட்டவார்த்தைகளையும் பாவிச்சுட்டாரு மனுசன். வடிவேலு தண்ணிஅடிக்கிறதுக்காக திட்டச்சொல்லுவாருல்ல அந்த மாதிரி. பாவம் அந்தச் சகோதரி, அவர்களிற்குள் என்ன பிரச்சனையோ, அனாலும் இது ரெம்ப ஓவர். நானும் தான் எவ்வளவு நேரந்தான் தூங்கிறமாதிரியே படுத்திருக்கிறது. அது போக என்னதான் அவருடைய குடும்பப்பிரச்சனை என்றாலும் அவரை நாம் பார்க்கும் பார்வையில் நிச்சயம் மாற்றத்தைக் ஏற்படுத்தும். அந்தப் பெண் இவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்ததா அல்லது மியூற் பண்ணீட்டு தலையத்தலைய ஆட்டிகிட்டிருந்ததா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பெரும்பாலும் நாம் முடிந்து போன விடயங்களிற்காகவே அதிகம் சண்டை போடுகின்றோம். தவறுகளை மன்னித்து இனிமேல் என்ன தீர்வென்பதை நம் மனம் சிந்திக்க மறுக்கிறது. மனைவி பிள்ளைகளாக இருந்தாலும் பழிவாங்கவோ தண்டிக்கவோ துடிக்கிறது. இதனாலேயே குடும்பங்களிற்குள் எத்தனையோ சண்டைகள், பிரிவுகள்.... வீட்டிற்கு வீடு வாசல்படிதான்.......

No comments:

Post a Comment