Pages

Thursday, May 10, 2012

வாழை இலை

யாழ் மாநகரசபை எல்லையினுள் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி பார்த்த ஞாபகம். அதன் பின்பு மாநகர சபை எல்லையினுள் ஒரு அறிவிப்புப் பலகையிலும் பார்த்திருக்கிறேன். விடயம் அதுவல்ல. யாழ் மாநகரசபை மட்டுமல்ல யாழ் குடாநாடு முழுவதுமே பொலித்தீன் பாவனை அமோகமாக நடைபெருகின்றது. அதிலும் Lunch Sheet பாவனை தவிர்க்கமுடியாததாகிவிட்டது. குடாநாட்டைப் பொறுத்தமட்டில் வாழைச்செய்கை சிறந்த முறையில் நடைபெற்றுவரும் நிலையில் Lunch Sheet க்குப்பதிலாக வாழை இலையை உபயோகித்தால் சூழலும் பாதுகாக்கப்படும் அதே சமயம் தற்பொழுது மீளக்குடியமர்ந்துவரும் மக்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும். ஏனெனில் மீள்குடியமரும் மக்கள் வாழைச் செய்கையிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி எமது மாநகரசபை முதல்வர் மற்றும் குடாநாட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசியல்வாதிகள் சிந்தித்து உதவுவார்களா? அத்துடன் பொதுமக்களும் வாழை இலையில் சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும். வாழைத்தோட்டம் வைத்துக்கொண்டு Lunch Sheet இல் சாப்பிட்டால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்ல எதிர்காலச்சந்ததியினருமே. ஏனெனில் Lunch Sheet சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

No comments:

Post a Comment